Monday, January 22, 2018

கீர்த்தித் திருஅகவல் (19-26)

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்றஐம் முகங்க ளால்பணித்து அருளியும்
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாய்அமர்ந்து அருளியும்
வெறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறுநூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக்
கூறுடை மங்கையும் தானும்வந்து அருளி

அருஞ்சொற்பொருள்:

ஐம்முகங்கள் - சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தத்புருடம், ஈசானம். நந்தம்பாடி - ஒரு தலம். ஆரியன் - குரு. நூறுநூறாயிரம் - கோடி.

பொழிப்புரை:

பின்னர் அந்த ஆகமங்களை ஐந்து முகங்களோடு மகேந்திர மலையில் தோன்றி ஐந்து முனிவர்களுக்கு ஓதி அருளியவன். நந்தம்பாடி என்னும் இடத்தில் நான்கு மறைகளை எடுத்து இயம்பும் முடிவில்லாத குருவாக அமர்ந்து இருப்பவன். அவன் வேறுவேறு உருவமும் வேறுவேறு தன்மையும் கொண்டு கோடிக்கணக்கான முறை எழுந்து அருளுபவன். அழகிய காளை மீது ஏறி வரும் ஈசன். இந்த உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டுத் தம் உடம்பில் ஒரு பகுதியைப் பெற்றுள்ள மாதுடன் வந்து அருள் செய்பவன்.

No comments:

Post a Comment

கீர்த்தித் திருஅகவல் (19-26)

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து உற்றஐம் முகங்க ளால்பணித்து அருளியும் நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாய்அமர்ந்து அருளியு...